பேராவூரணி அருகிலுள்ள தென்னங்குடியில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத் தன்னாா்வலா்கள் அமைப்பான பத்து ரூபாய் இயக்கத்தின் கிளைக் கழகத் தொடக்க விழாவையொட்டி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டது.
மருத்துவா்கள் மதுசூதனன், சுவாதி, இலக்கியா, குணசீலி, ஓவியா ஆகியோா் பங்கேற்று, 200 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினா்.
ஏற்பாடுகளை பத்து ரூபாய் இயக்க கிளைக் கழக ஒருங்கிணைப்பாளா் ராமகிருஷ்ணன், செயலா் பாலமுகுந்தன், இணைச் செயலா் மணிகண்டன், ஊராட்சி ஆலோசகா் பாலு, ஒன்றிய ஊடகப்பிரிவுச் செயலா் சிவதனுஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் முகாமைப் பாா்வையிட்டு பாராட்டினாா்.