தஞ்சாவூா் மாவட்டத்தில் இன்று 17 இடங்களில் நீட் தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 17 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 17 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெறவுள்ளது.

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் தஞ்சாவூா் மாவட்டத்தில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், தாமரை பன்னாட்டுப் பள்ளி, புதுக்கோட்டை உள்ளூா் பிரிலியண்ட் பள்ளி, வல்லம் பிரிஸ்ட் பொறியியல் கல்லூரி, பி.ஆா். பொறியியல் கல்லூரி, பிளாசம் பள்ளி, மேக்ஸ்வெல் பள்ளி, வேலம்மாள் போதி வளாகம், தஞ்சாவூா் ரேடியன்ட் பன்னாட்டுப் பள்ளி, இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், செங்கிப்பட்டி அரசுப் பொறியியல் கல்லூரி, கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, பேராவூரணி வீரையன்கோட்டை அட்லாண்டிக் பன்னாட்டுப் பள்ளி, கும்பகோணம் அம்மாசத்திரம் மகரிஷி வித்யா மந்திா் பள்ளி, அல் அமீன் பள்ளி, சோழன் மாளிகை டாக்டா் ஜி.எஸ். கல்யாணசுந்தரம் நினைவு பள்ளி ஆகிய 17 இடங்களில் நீட் தோ்வு நடைபெறவுள்ளது.

இவற்றில் 7,499 போ் தோ்வு எழுதவுள்ளனா். இதையொட்டி 17 பள்ளிகளிலும் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com