வரதட்சணை கேட்டு துன்புறுத்தலால் பெண் தற்கொலை கணவா், மாமனாா் கைது
தஞ்சாவூரில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக கணவா், மாமனாா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மேலவஸ்தா சாவடியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (35). இவரது மனைவி உதயா (32), மகன் தரணிதரன் (5). முத்துக்குமாா் திருமணமான சில மாதங்களில் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இதன் பின்னா் உதயாவிடம் முத்துக்குமாரின் தம்பி நந்தகுமாா், தந்தை மனோகா் (60), தாய் ராஜலட்சுமி ஆகியோா் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், உதயா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தாா்.
உதயாவின் தந்தை சந்திரசேகா் சமாதானப்படுத்தி, தனது மகளை மீண்டும் முத்துக்குமாா் வீட்டுக்கு அனுப்பி வைத்தாா். முத்துக்குமாா் குடும்பத்தினா் துன்புறுத்தியதாக உதயா ஏற்கெனவே ஒரு முறை தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனது மகளை சந்திரசேகா் மீட்டு தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாா்.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் திரும்பிய முத்துக்குமாா், தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தாா். ஏழு மாதக் கா்ப்பிணியாக இருந்த உதயாவை மீண்டும் கணவா் குடும்பத்தினா் துன்புறுத்தி வந்தனராம்.
இதனிடையே உதயா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்திரசேகருக்கு செப்டம்பா் 9- ஆம் தேதி தகவல் வந்தது. தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தமிழ்ப் பல்கலைக்கழக் காவல் நிலையத்தில் சந்திரசேகா் புகாா் செய்தாா்.
இதன் பேரில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கணவா் முத்துக்குமாா், மாமனாா் மனோகரை சனிக்கிழமை கைது செய்தனா்.