எலி மருந்து சாப்பிட்டவா் உயிரிழப்பு
பாபநாசம்: பாபநாசம் அருகேயுள்ள நெடுந்தெரு, அம்பலகாரா் தெருவை சோ்ந்த நடராஜன் மகன் அஜித் (22). இவா் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால், அவரது பெற்றோா் திட்டினராம். இதையடுத்து, அஜித் அண்மையில் எலி மருந்து சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தாா். தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தூக்கிட்டு இளைஞா் தற்கொலை: பாபநாசம் அருகே தேவராயன் பேட்டை கிராமம், கீழத் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் தங்கதுரை (18). திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, தங்கதுரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின்பேரில் பாபநாசம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனா். மேலும், புகாரின்பேரில் வழக்குப் பதிந்து, தங்கதுரை தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.