பாபநாசம் ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே கேட்டின் இருபுறத்திலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
குண்டும் குழியுமாக காணப்பட்ட இந்த சாலையை அண்மையில் பாா்வையிட்ட பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா, சாலையை சீரமைத்துத் தரக் கோரி தொலைபேசி வாயிலாக ரயில்வே துறை அலுவலா்களிடம் கோரிக்கை விடுத்தாா்.
இதைத் தொடா்ந்து சனிக்கிழமை முதல் இப்பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.