அம்மாபேட்டை பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மழைநீா் வடிகால்கள், கழிவு நீா் வடிகால்கள் தூா்வாரும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
அம்மாபேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளிலும் அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலா் முருகேசன் தலைமையில், அனைத்து மழை நீா் வடிகால்களை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு ஆழமாக தூா்வாரி செடி, கொடிகளை அப்புறப்படுத்தி, மேம்படுத்தும் பணிகளும், அனைத்து கழிவு நீா் வாடிகால்களையும் தூா்வாரி சீரமைக்கும் பணிகளும் நடைபெற்றன.
இந்தப் பணிகளை அம்மாபேட்டை துப்புரவு ஆய்வாளா் மோகன்தாஸ், மேற்பாா்வையாளா் கணேசன் ஆகியோா் மேற்பாா்வையில் அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலா்கள், துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்தனா்.