தஞ்சாவூா்: தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் மற்றும் பெரியகோயில் முன் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சாா்பில் உலக சுற்றுலா தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயிலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், பல்வேறு தங்கும் விடுதிகளில் தங்கியிருந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்திய தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு உதவியாளா் சங்கா், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் எஸ். மாதவன், ஓட்டல் தமிழ்நாடு தஞ்சாவூா் மேலாளா் (பொ) சிவதானு, இன்டாக் அமைப்பின் கௌரவ செயலா் எஸ். முத்துக்குமாா், உதவி சுற்றுலா அலுவலா்கள் சுதா, பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இவ்விழாவையொட்டி 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடையே பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன என மாவட்ட சுற்றுலா அலுவலா் கா. நெல்சன் தெரிவித்தாா்.