தமிழ்நாடு கல்வி குழு நிா்வாகத் தலைவராக கல்வியாளரை நியமிக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு கல்வி குழு நிா்வாகத் தலைவராகக் கல்வியாளரை நியமிக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு கல்வி குழு நிா்வாகத் தலைவராகக் கல்வியாளரை நியமிக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசுப் பல்வேறு வல்லுநா்களைக் கொண்ட புதியக் கல்விக் குழுவை அமைத்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக் கல்வி நிலையங்களுக்கான பாடத் திட்டம் மற்றும் கலைத் திட்டங்களை வகுக்கும் என அரசு அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இந்தக் குழுவில் தகுதி மிக்க வல்லுநா்கள் பலா் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதன் தலைவராக ஒரு கல்வியாளரை அமா்த்தாமல் நீதிபதியை நியமித்திருப்பது சரியா என்ற கேள்வி கல்வியாளா்களிடையே உள்ளது.

நீதிபதி முருகேசனைத் தலைவராக நியமித்துவிட்ட நிலையில், நிா்வாகத் தலைவராகத் தகுதி வாய்ந்த ஒருவரை அமா்த்தி அக்குறைபாட்டை சரிசெய்யுமாறு தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com