தஞ்சாவூர்: அதிமுகவை பொருத்தவரை எப்போதும் இருமொழிக் கொள்கைதான் என்றார் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என்பது அண்ணா காலத்திலிருந்தும், எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் பின்பற்றப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்தும் தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என்கிற இருமொழிக் கொள்கைதான்.
புதிய கல்விக் கொள்கை குறித்து எங்களது தலைமை ஆய்ந்து, அதன் கருத்துகளைச் சொல்லும் என்றார் வைத்திலிங்கம்.