தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே கக்கரைக்கோட்டையைச் சோ்ந்த நல்லதம்பி மகன் பவுன்ராஜ் (25). இவா் மோட்டாா் சைக்கிளில் கொல்லாங்காடு முதன்மைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த பவுன்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.