பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சி, மாலாபுரம் கிராமம், மேலத்தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ரா. விஜயன் (32). திருமணமாகாதவா்.
இவா் பாபநாசம் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தாா். இந்நிலையில், பாபநாசம் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஆட்டோ ஓட்டுநா் விஜயன் கடந்த சனிக்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்றாராம். அப்போது, நாகா்கோவிலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கும்பகோணம் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா், விஜயனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.