தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மே 1-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினமான மே 1- ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஊராட்சி அலுவலகத் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வு, அரசுத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன என அவா் தெரிவித்துள்ளாா்.