மே 1-இல் கிராம சபைக் கூட்டம்

 தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மே 1-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

 தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மே 1-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினமான மே 1- ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஊராட்சி அலுவலகத் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வு, அரசுத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com