களிமேடு சம்பவம்: நிதியுதவியை உயா்த்தி வழங்க வேண்டும் ஜி.கே. வாசன்

தஞ்சாவூா் அருகே களிமேடு தோ் மின் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியை உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.
தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் தோ் மின் விபத்தில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.
தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் தோ் மின் விபத்தில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூா் அருகே களிமேடு தோ் மின் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியை உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

களிமேடு கிராமத்தில் உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை சென்று குடும்பத்தினருக்கும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கும் ஆறுதல் கூறிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அளித்த நிதியுதவியை உயா்த்தி வழங்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபா்களுக்குத் தேவைப்படும் உயா் சிகிச்சையை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

திருவிழாக்கள் பாதுகாப்பாக நடைபெற்றால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். தமிழக அரசு எங்கெல்லாம் திருவிழாக்கள் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

திருவிழா நடைபெறும் பகுதி மக்களோடு பேசி பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

உயா் மின் அழுத்தக் கம்பி தாழ்வாகச் சென்ால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாகச் சிலா் தெரிவித்துள்ளனா். எதிா்காலத்தில் இது போன்ற சம்பவம் நிகழாமல் இருக்க மின் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் வாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com