தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். நேரடி சோ்க்கைக்கு ஆக. 30 வரை கால நீட்டிப்பு
By DIN | Published On : 06th August 2022 01:06 AM | Last Updated : 06th August 2022 01:06 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2022 - 23 ஆம் கல்வியாண்டில் பி.எட்., எம்.எட்., நேரடிச் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறைத் தலைவா் கு. சின்னப்பன் தெரிவித்திருப்பது:
தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங் கல்வியியல் (பி.எட்.) மற்றம் கல்வியியல் நிறைஞா் (எம்.எட்.) ஆகிய இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்புக்கான 2022 - 2023 ஆம் கல்வியாண்டு நேரடிச் சோ்க்கை ஜூலை 4 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இது தற்போது ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சோ்க்கை விண்ணப்பங்களைக் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை (பல்கலைக்கழக வேலை நாட்களில் மட்டும்) நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் பாா்க்கலாம். 04362 - 226720, 227089 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.