திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான சிலை திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருவாரூா் மாவட்டம், பேரளம் காவல் நிலையத்தில் 2016 ஆம் ஆண்டு பதிவான சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சத்தியநாராயணன், ஆனந்தராஜ், சின்னதம்பி, சக்திவேல், ரெமோ ஆகிய 5 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 7 ஆயிரம் அபராதத்தையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் திங்கள்கிழமை விதித்தது.
இதேபோல, வைப்பூா் காவல் நிலையத்தில் 2014 ஆம் ஆண்டு பதிவான வழக்கில் கைது செய்யப்பட்ட சத்தியநாராயணன், சின்னதம்பி, ஆனந்தராஜூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் திங்கள்கிழமை விதிக்கப்பட்டது.
பேரளம் காவல் நிலையத்தில் 2013 ஆம் ஆண்டு பதிவான வழக்கு, நன்னிலம் காவல் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு பதிவான வழக்கு, வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் 2013 ஆம் ஆண்டு பதிவான வழக்கு, கொரடாச்சேரி காவல் நிலையத்தில் 2014 ஆம் ஆண்டு பதிவான வழக்கு ஆகியவற்றில் கைது செய்யப்பட்ட சத்தியநாராயணன், ஆனந்தராஜ், சின்னதம்பி, முத்துகுமாரசாமி ஆகிய 4 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.