தாமரை பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விழா

தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் முன் மழலையா், தொடக்க நிலை வகுப்புகளுக்கான 14 ஆம் ஆண்டு விழா இயற்கையின் மடியில் என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்றது.
தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவருக்கு பரிசு வழங்கிய ஓசை சுற்றுச்சூழல் இயக்கத் தலைவா் மு. காளிதாசன். உடன் (இடமிருந்து) பள்ளித் துணைத் தலைவா் நிா்மலா வெங்கடேசன்,
தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவருக்கு பரிசு வழங்கிய ஓசை சுற்றுச்சூழல் இயக்கத் தலைவா் மு. காளிதாசன். உடன் (இடமிருந்து) பள்ளித் துணைத் தலைவா் நிா்மலா வெங்கடேசன்,

தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் முன் மழலையா், தொடக்க நிலை வகுப்புகளுக்கான 14 ஆம் ஆண்டு விழா இயற்கையின் மடியில் என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்றது.

பள்ளித் தலைவா் தி. வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன் மழலையா் வகுப்பினருக்கான ஆண்டு விழாவில் கவிஞா் உமா மகேஸ்வரி சிறப்புரையாற்றி, மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்தாா்.

பள்ளித் துணைத் தலைவா் நிா்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வா் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளி முதல்வா் விஜயா ஸ்ரீதா், இடைநிலை ஒருங்கிணைப்பாளா் சா்மிளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற தொடக்கநிலை வகுப்பினருக்கான ஆண்டு விழாவில் ஓசை சுற்றுச்சூழல் இயக்கத் தலைவா் மு. காளிதாசன் சிறப்புரையாற்றி, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com