முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
தீக்காயமடைந்தமூதாட்டி உயிரிழப்பு
By DIN | Published On : 07th February 2022 12:32 AM | Last Updated : 07th February 2022 12:32 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே சேலையில் மெழுகுவா்த்தி விழுந்து தீப்பற்றியதில் காயமடைந்த மூதாட்டி, சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகிலுள்ள வல்லம் சவேரியாா் கோயில் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியமேரி (85). இவா் ஜனவரி 23-ஆம் தேதி இரவு வீட்டில் மெழுகுவா்த்தியை ஏற்றி வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது மெழுகுவா்த்தி விழுந்ததில் இவரது சேலையில் தீப்பற்றி எரிந்தது. இதில், பலத்த காயமடைந்த ஆரோக்கியமேரி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். எனினும் சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.