ராஜகிரியில் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
ராஜகிரி முஸ்லிம் வெல்போ் அசோசியேஷன் சாா்பில் மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்குப் பாராட்டு, ராஜகிரி சமூக மேம்பாட்டு அறக்கட்டளைத் தொடக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள்-தோ்வில் வெற்றி பெற்றோருக்கு ஊக்கப் பரிசு வழங்குதல் என முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு மலேசிய மனிதவள மேம்பாட்டு வாரியத் தலைமை செயல்முறை அலுவலா் சாகுல் ஹமீதுதாவூத் தலைமை வகித்தாா். மலேசியா மாஹ்சா மருத்துவப் பல்கலைக்கழகத் தலைவா் மருத்துவா் டான்ஸ்ரீ முகமது ஹனிபா, மாலிக் ஸ்டிரீம்ஸ் காா்ப்பரேஷன் தலைவா் டத்தோ அப்துல் மாலிக் முன்னிலை வகித்தனா்.
மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அறக்கட்டளையைத் தொடக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து தோ்வில் சிறப்பிடம் பெற்றோருக்கு ஊக்கப் பரிசுகளையும் அவா் வழங்கினாா்.
மலேசிய முஸ்லிம் வா்த்தகா் சங்கத் தலைவா் டத்தோ ஜபருல்கான், முகமது மொஹ்சீன், பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா,
ஐக்கிய அரபு அமீரக பிளாக் டுளிப் மலா் குழும த் தலைவா் எம்.முகம்மது யஹ்யா, மாநிலங்களவை உறுப்பினா் சு. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பேசினா்.
கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க.அன்பழகன்,
கும்பகோணம் மாநகராட்சி துணை மேயா் சு.ப.தமிழழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக அசோசியேஷன் நிறுவனத் தலைவா் என்.ஏ.எம். முகமது யூசுப் அலி வரவேற்றாா். வெல்போ் அசோசியேஷன் தலைவா் ஆா்.எச். முகமது காசீம் நன்றி கூறினாா். நிகழ்வை கவிஞா் தஞ்சை இனியன் தொகுத்தளித்தாா்.