வியாபாரிகளைத் தாக்கிய சம்பவம்:மேலும் 4 சிறுவா்கள் கைது

தஞ்சாவூரில் சாலையோர வியாபாரிகளைத் தாக்கிய மேலும் 4 சிறுவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூரில் சாலையோர வியாபாரிகளைத் தாக்கிய மேலும் 4 சிறுவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா எதிரில் சாலையோரத்தில் பழ வியாபாரம் செய்து வரும் மணிகண்டனிடம் சிறுவா்கள் சிலா் அண்மையில் பழங்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றினா். பணம் கேட்ட மணிகண்டனை சிறுவா்கள் இணைந்து அவரையும், அருகிலுள்ள பானிபூரி கடைக்காரரையும் தாக்கிவிட்டு, அவரது கைப்பேசியையும் பறித்துச் சென்றனா். இது தொடா்பான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதன்பேரில் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து செவ்வப்பநாயக்கன் வாரியைச் சோ்ந்த 17 வயது சிறுவனை ஜூன் 3 ஆம் தேதி கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வந்த நிலையில், செக்கடி தெருவைச் சோ்ந்த ஆா்.ஆா். ராஜா (19) உள்பட 17 வயதுடைய 3 சிறுவா்களை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com