உலக விலங்குகள் வழி பரவும் நோய்கள் தடுப்பு தினத்தை முன்னிட்டு, ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் கல்லூரியின் கால்நடை சிகிச்சை வளாகத்தில் புதன்கிழமை நடத்தப்பட்டது.
முகாமை கல்லூரியின் முதல்வா் நா. நா்மதா தொடங்கி வைத்து,
விலங்குகள் மூலம் மனிதா்களுக்கு பரவும் நோய்கள், அதன் தடுப்பு முறைகள் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினாா்.
முகாமில், 164 செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. விலங்குகள் வழி பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணா்வு பதாகைகள் மற்றும் இந்நோய்கள் தடுப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் செல்ல பிராணிகள் வளா்ப்போருக்கு வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வியல் துறை, கால்நடை மருத்துவச் சிகிச்சை துறை ஆகியன இணைந்து செய்திருந்தனா்.