பேராவூரணியில் தெரு வியாபாரிகள்சங்க ஆலோசனைக் கூட்டம்

பேராவூரணியில் தெருவோர வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பேராவூரணியில் தெருவோர வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆறுமுகம் தலைமை வைத்தாா். செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.

‘சங்க உறுப்பினா்கள் அனைவருக்கும் நல வாரிய அட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பது, சங்க  உறுப்பினா்களுக்கு  வங்கியின் மூலம் கடன் பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்வது,  தெருவோர வியாபாரிகளை  பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பேராவூரணி நகரில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகளை அப்புறப்படுத்த பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராவூரணி நகரில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட  வங்கிகளில் தமிழ் பேசத் தெரிந்தவா்களை வங்கி மேலாளராக  நியமனம் செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஏஐடியுசி பொறுப்பாளா் முருகேசன், சித்திரவேல், நீலகண்டன், வசந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com