தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணித்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கிய நிலையில், தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய கல்வி மாவட்டங்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தஞ்சையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தில் வந்த முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர்களை ஒருமையில் பேசியதாகவும், தாங்கள் விரும்பிய பகுதியில் விடைத்தாள் திருத்தும் பணியில் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் திருத்தும் பணியை புறக்கணித்தனர்.