வேளாண் விளை பொருள்களுக்கு 1% சந்தை வரியை நீக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

வேளாண் விளை பொருள்களுக்கு 1% சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

வேளாண் விளை பொருள்களுக்கு 1% சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போது உள்ள திமுக அரசு அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் 1% சதவீதம் சந்தை வரி விதிப்பது என்பது ஏற்புடையது இல்லை.

எனவே, உடனடியாக சந்தை வரியை நீக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கையாக உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com