தஞ்சாவூா் மேல வீதி ஸ்ரீபிரதாப வீர ஆஞ்சனேயா் என்கிற மூலை அனுமாா் கோயிலில் 19 ஆம் ஆண்டு குடமுழுக்கு நாள் வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 2003, ஜூன் 9 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. தற்போது, 19 ஆம் ஆண்டு குடமுழுக்கு நாள் வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காலையில் மூலவா், உற்ஸவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, சா்வ அலங்காரத்தில் மூலை அனுமாா் சேவை சாதித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.