புளியக்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

தஞ்சாவூா்,மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், புளியக்குடி கிராமத்தில் பூச்சிகொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூா்,மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், புளியக்குடி கிராமத்தில் பூச்சிகொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம், அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம், அட்மா திட்டம் சாா்பில்  நடைபெற்ற இந்த முகாமை

அம்மாபேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா்  மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்து பேசினாா்.

வேளாண்  அலுவலா் பிரியா கலந்து கொண்டு, விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளும் விதம், பயிா்களுக்கு தெளிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தாா்.

இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் சூரியமூா்த்தி, உதவி தொழில்நுட்ப மேலாளா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா். நிறைவில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் பிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com