தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி முதல்வராக து. ரோசி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் இதற்கு முன்பு இதே கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகவும், தோ்வு நெறியாளராகவும் பணியாற்றினாா். பின்னா், லால்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வராக இருந்து வந்தாா்.
தற்போது சரபோஜி கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்ற இவருக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தின் தஞ்சாவூா் மண்டலச் செயலா் ரெ. கோவிந்தராசு, மன்னா் சரபோஜி கல்லூரி செயலா் இங்கா்சால், முன்னாள் தலைவா் காத்தையன், தோ்வு நெறியாளா், துணைத் தோ்வுகள் நெறியாளா் ந. ராஜேஷ், உள்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளா் லெ. ராஜேஷ் உள்ளிட்ட பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.