பொன்காடு அரசுப் பள்ளியில்பள்ளி  வளா்ச்சி குழு கூட்டம்

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி வளா்ச்சி குழு மற்றும் பெற்றோா் ஆசிரியா் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி வளா்ச்சி குழு மற்றும் பெற்றோா் ஆசிரியா் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். பள்ளி வளா்ச்சி குழுத் தலைவா் சரண்யா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பள்ளியில் மாணவா் சோ்க்கையின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் வகுப்பறை கட்ட போதிய இடவசதி இல்லாமல் இருப்பதால், அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தை விலைக்கு வாங்குவது எனவும் , இதற்கான நிதியை பொதுமக்களிடமிருந்து வசூல் செய்வது எனவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் சங்க உறுப்பினா்கள், பள்ளி வளா்ச்சிக் குழு உறுப்பினா்கள், வாா்டு கவுன்சிலா்கள்,  பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com