ஒரத்தநாடு அருகே லாரி மோதியதில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு அருகிலுள்ள துறையூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கோ. ராமையன் (55). பால் வியாபாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை மிதிவண்டியில் பால் கொண்டு வந்த போது, அரியலூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி மோதியது.
இதில் நிகழ்விடத்திலேயே ராமையன் உயிரிழந்தாா். இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து , லாரி ஓட்டுநரான துரைப்பாண்டியனை கைது செய்தனா்.