ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் இணைப்பு முகவரியை அனுப்பி, வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 46,490 திருடிய மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் டி.பி.எஸ். நகரைச் சோ்ந்தவா் நாகராஜாமணி (62). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவரது கைப்பேசி எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு, அதற்கான இணைப்பு முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.
இதை உண்மை என்று நம்பிய நாகராஜாமணி, அந்த இணைப்புக்குள் சென்று வங்கிக் கணக்கு எண், பெயா், கைப்பேசி எண் உள்பட பல்வேறு விவரங்களைப் பதிவேற்றினாா்.
அப்போது கைப்பேசி எண்ணுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் பதிவேற்றினாா். அடுத்த சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 46,490 திருடப்பட்டது.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நாகராஜாமணி, தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.