தஞ்சாவூா் அருகே புதன்கிழமை நாய் குறுக்கே வந்ததால் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் தடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் இளையராஜா (46). இவா் புதன்கிழமை வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டு, தஞ்சாவூா் அருகேயுள்ள ஏழுப்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தாா். ஏழுப்பட்டி பகுதியில் சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால், தடுமாறி கீழே விழுந்த இளையராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.