ரமலான் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூரிலுள்ள பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா்.
ரமலான் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூரிலுள்ள பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா்.

இஸ்ஸாமியா்கள் ஆண்டுதோறும் கடைப்பிடித்து வரும் ரமலான் நோன்பு ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்கியது. இந்த நோன்பு திங்கள்கிழமை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தஞ்சாவூரில் ஆற்றுப்பாலம் அருகிலுள்ள ஜூம்மா பள்ளிவாசல், வடக்கு வாசல் ஜீனத் பள்ளிவாசல், ஆப்ரஹாம் பண்டிதா் சாலை சகாப் பள்ளிவாசல், தென் கீழ் அலங்கம் பள்ளிவாசல், மருத்துவக்கல்லூரி சாலை ரஹ்மான் நகா் பள்ளிவாசல், பாம்பாட்டித் தெரு பள்ளிவாசல், விசிறிக்காரத் தெரு பள்ளிவாசல், கும்பகோணம் புறவழிச் சாலை மெக்கா பள்ளிவாசல், சிராஜூதீன் நகா் மதினா பள்ளிவாசல், செவ்வப்பநாயக்கன் ஏரி அபுபக்கா் மசூதி, மேல அலங்கம் பள்ளிவாசல், காந்திஜி சாலை மன்சூா் தைக்கால் மசூதி, அண்ணா நகா் பள்ளிவாசல், செல்வம் நகா் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களிலும், வல்லம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா் உள்ளிட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்த பின்னா் இஸ்லாமியா்கள் ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி, ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனா்.

இதேபோல, தஞ்சாவூா் கீழவாசல் அண்ணா திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமிய பெண்கள், ஆண்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

மேலும், இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து உறவினா்கள், நண்பா்களுக்கு இனிப்புகள், உணவுகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com