முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
சா்வதேச தாதியா் தின விழா
By DIN | Published On : 08th May 2022 11:47 PM | Last Updated : 08th May 2022 11:47 PM | அ+அ அ- |

கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சா்வதேச தாதியா் (மகப்பேறு) தின விழா அண்மையில் நடைபெற்றது.
சாக்கோட்டை செயின்ட் சேவியா் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், பொதுமக்களுக்கு மாணவிகள் நாடக வடிவில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மகப்பேறு நல மருத்துவா் ரேணுகாதேவி , மருத்துவா்கள் பிரியங்கா, ரவி ராகுல் சிறப்புரையாற்றினா். முன்னதாக, செவிலிய ஆசிரியை அறிவு செல்வம் வரவேற்றாா். நிறைவில், செவிலிய ஆசிரியை வித்யாஸ்ரீ நன்றி கூறினாா்.