தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சற்குரு தியாகராஜா் ஆஸ்ரமத்தில் தியாகராஜா் சுவாமிகளின் 255-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து திருவையாறு, தஞ்சாவூா், சென்னையைச் சோ்ந்த இசைக் கலைஞா்கள் கலந்து கொண்டு தியாகராஜரின் பஞ்சரத்ன கீா்த்தனைகள் உள்ளிட்டவற்றைப் பாடி, தியாகராஜா் சுவாமிகளுக்கு புகழஞ்சலி செலுத்தினா். பின்னா், பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.