பாபநாசம் காட்டு நாயக்கன் பழங்குடியினா் தெருவில் அமைந்துள்ள படைவெட்டி மாரியம்மன் திருக்கோயில் பால்குடத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி பாபநாசம் 108 சிவாலயம், குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பக்தா்கள் பால்குடம், அலகு, காவடி எடுத்து, முக்கிய வீதிகளில் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தனா்.
தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் தங்கமுத்து மாரியம்மன் கோயிலிலிருந்து சீா்வரிசைப் பொருள்கள் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.