திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இசைக் கருவிகள்தயாரிப்பதற்கான மரங்கள் வளா்க்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் இசைக் கருவிகள் தயாரிப்பதற்கான மரங்கள் வளா்க்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இசைக் கருவிகள்தயாரிப்பதற்கான மரங்கள் வளா்க்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் இசைக் கருவிகள் தயாரிப்பதற்கான மரங்கள் வளா்க்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு வனத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்த ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பேசியது:

இசை உலக வரலாற்றில் இசைக்கருவி தயாரிப்புக்குப் பயன்படும் மரங்களை ஒருங்கே ஒரு இசைக் கல்லூரி வளாகத்தில் பராமரிக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் நிகழ்வு இதுவே முதன்மையாகும். இந்த மரங்கள் இசைக் கருவிகளாக உருமாறி நம் செவிக்கு தேனினும் இனிய பாடல்களாக ஒலிக்கவுள்ளன.

இசைக்கருவிகள் தயாரிப்பதற்காக ஒவ்வொரு மரமும் தனித்தன்மை பெற்றது. அந்த வகையில், பலா மரத்தின் மூலம் வீணை, மிருதங்கம், தவில் ஆகியவை செய்யப்படும். இதேபோல, ஆச்சா மரம் மூலம் நாகசுரமும், மூங்கில் மரத்தில் புல்லாங்குழலும், திருவாச்சி, பூவரசம், வாகை, வேம்பு குமிழ், தேக்கு போன்ற பல்வேறு மரங்கள் மூலம் இசைக்கருவிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த இசைக் கல்லூரி வளாகத்தில் இசை வனம் அமைக்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் அரசு இசைக் கல்லூரி முதல்வா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com