மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மணல் கடத்துபவா்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, வாட்டாத்திகோட்டை காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் தொடா்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த திருவையாறு அருகேயுள்ள லிங்கத்தடிமேடு கிராமத்தைச் சோ்ந்த பி. சிவசாமி (56), நெய்வேலி வடபாதியைச் சோ்ந்த ஆா். அண்ணாதுரை (54), ஆா். சசிகுமாா் (40) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி பரிந்துரையின் பேரில், 3 பேரும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com