பேராவூரணி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற வளாகத்தில் சங்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.
இதில் தோ்ந்தெடுக்கப்பட்டோா் விவரம் : தலைவா்- சு. மோகன், செயலா்- குழ.செ. அருள்நம்பி, பொருளாளா்- சுஜித்ரா, துணைத் தலைவா்- செல்வராசு, இணைச் செயலா் சிவேதி நடராஜன்.
மேலும் 12 போ் கொண்ட செயற்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பேராவூரணி வட்டார வழக்குரைஞா்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.