தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
திருவோணம் ஒன்றியத்தில் தோப்பநாயகம் கிராமம் அருகே கல்லணைக் கால்வாய் புனரமைக்கும் பணி, சிவவிடுதி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகளின் நிலை, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம், பள்ளிக் கட்டடத்தின் பாதுகாப்பு, கழிப்பறை வசதி, சுகாதாரம் போன்றவை குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
பணிகொண்டான்விடுதி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள், சிவவிடுதியில் தூா்வாரும் பணிகள், பட்டுக்கோட்டை நகராட்சியின் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் போன்றவற்றையும் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் (பொறுப்பு) ஐவண்ணன், நகராட்சி ஆணையா் சுப்பையா, வட்டாட்சியா்கள் சீமான், கணேசுவரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.