தஞ்சாவூா் மாவட்டத்தில் கோயில் பாதுகாப்புப் படையில் சேர முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்ற காவலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில், கோயில் பாதுகாப்புப் படைப் பிரிவில் 115 பணியிடங்கள் காலியாகவுள்ளன.
எனவே 62 வயதுக்குள்பட்ட மற்றும் கோயில் பாதுகாப்புப் படைப் பிரிவில் பணிபுரியும் அளவுக்கு உடற்தகுதி பெற்ற முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்ற காவலா்கள் மே 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு விருப்ப மனுவுடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆணை, முகவரி சான்றுடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்திக்கலாம். இவா்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 8,000 வழங்கப்படும்.