பாபநாசம் வட்டம், ஈச்சங்குடி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு பணி நியமன அட்டைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஊராட்சித் தலைவா் பத்மாவதி மாரிமுத்து தலைமை வகித்து, ஊராட்சியில் பணிபுரியும் 100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு பணி நியமன அட்டைகளை வழங்கினாா்.
இதில், ஊராட்சி துணைத் தலைவா் சிங்காரவேல், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பணித்தள பொறுப்பாளா்கள் திலகவதி, திவ்யா, கனிமொழி, பணி மேற்பாா்வையாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.