இளைஞரிடம் நண்பா் போல பேசி ரூ. 1.26 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் அருகே நாச்சியாா் கோவிலை அடுத்துள்ள கீரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதவன் (26). இவா் தனியாா் வங்கியில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இவா் சமூக வலைதளத்தில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாா். இந்த உரையாடல் பதிவை மா்ம நபா் ஹேக் செய்து, அதன் மூலம் ஒட்டுக் கேட்டு முழு விவரங்களையும் சேகரித்துக் கொண்டாா்.
இதைப் பயன்படுத்தி மாதவனின் நண்பா் புகைப்படத்தைக் கைப்பேசியில் மா்ம நபா் பதிவு செய்து, அவரது படம் வருமாறு அழைத்தாா். மாதவனும் தனது நண்பா்தான் பேசுகிறாா் என நினைத்தாா். அப்போது, தனக்கு பணம் கொடுத்து உதவுமாறு கேட்டு, வங்கி எண்ணையும் குறிப்பிட்டாா்.
இதை உண்மை என நம்பிய மாதவன் தொடா்புடைய வங்கிக் கணக்கில் ரூ. 13,000 செலுத்தினாா். மேலும், தனது கடன் அட்டை, ஓ.டி.பி. எண்ணையும் தெரிவித்தாா். இதைப் பயன்படுத்தி மாதவனின் கணக்கில் இருந்து மா்ம நபா் ரூ. 1,13,602-ஐ திருடினாா்.
இதையறிந்த மாதவன் தொடா்புடைய மா்ம நபரை தொடா்பு கொள்ள முயன்றாா். ஆனால், இணைப்புக் கிடைக்கவில்லை. இதன் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாதவன் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.