பாபநாசம் வட்டாரத்தில் அறுவடைப் பணிகள் உள்ளிட்ட வேளாண் பணிகளை விவசாயிகள் விரைந்து முடிக்க வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநா் சுஜாதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாபநாசம் வட்டாரத்தில் பின்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் வயலில் அறுவடைப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.
வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதால் பருவ மழையின் பாதிப்பில் இருந்து பயிா்களை காத்துக் கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தங்கள் நிலங்களில் வடிகால் வசதிகள் சரியாக இருக்கின்றனவா என விவசாயிகள் தங்கள் கிராம அளவில் ஒருங்கிணைந்து வடிகால் வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.