கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகத்தை அதிமுகவினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வலியுறுத்தியும், நிா்வாகச் சீா்கேட்டை களைய கோரியும் இப்போராட்டம் நடைபெற்றது.
அதிமுக ஒன்றியச் செயலா் ஜி. முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் க. தவமணி, பேரூா் செயலா் எஸ். வைரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.