கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் 834 பேருக்கு ரூ. 84.99 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை மாலை வழங்கப்பட்டன.
நலத் திட்ட உதவிகளை வழங்கி சட்டப்பேரவைத் துணைத் தலைவா் கு. பிச்சாண்டி பேசியது:
இந்த விழாவில் ரூ. 84,99,088 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம் மூலம் 120 பேருக்கு ரூ. 32,556 மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சாா்பில் 3 பேருக்கு நடவு இயந்திரம், டிராக்டா் ரூ. 13.01 லட்சம் மதிப்பிலும், சமூக நலத் துறை சாா்பில் 20 பேருக்கு இரு பெண் குழந்தைகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்புத் தொகை பத்திரம் ரூ. 10 லட்சம் மதிப்பிலும் என 834 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினா் சு. கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாக்கோட்டை க. அன்பழகன் (கும்பகோணம்), மு.பெ. கிரி (செங்கம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.