மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 52,395 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 51,682 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 5,504 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 3,009 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 11,505 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.