பாபநாசம் வட்டார பகுதிகளில் கன மழை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமாா் 1 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமாா் 1 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் பாபநாசம், கபிஸ்தலம், அம்மாபேட்டை, சாலியமங்கலம், மெலட்டூா், பண்டாரவாடை, வழுத்தூா், அய்யம்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது, மின்தடையும் ஏற்பட்டது.

தொடா்ந்து மாலை நேரங்களில் மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் குறுவை நடவு பயிா்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com