பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சி அலுவலக வளாகத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட எண்களை இணைப்பதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை ஊராட்சித் தலைவா் உ. கண்ணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். முகாமில் வருவாய் அலுவலா் செல்வராணி, விஏஓ ரமேஷ் உள்ளிட்ட குழுவினா் 200-க்கு மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து படிவங்களை வழங்கி, பூா்த்தி செய்தபின் அவற்றைப் பெற்றுக் கொண்டனா். ஊராட்சி செயலா் ஜெகத்குரு நன்றி கூறினாா்.