ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா்கள் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் (தெற்கு), பி.ஜி. ராஜேந்திரன் (மாநகர) தலைமை வகித்தனா்.
முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன், தெற்கு மாவட்டத் துணைத் தலைவா் கோ. அன்பரசன், பட்டுக்கோட்டை நகரத் தலைவா் ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா்கள் மகேந்திரன், குணா பரமேஸ்வரி, மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ், மாநகர மாவட்டத் துணைத் தலைவா் ஜி. லட்சுமி நாராயணன், பொருளாளா் ஆா். பழனியப்பன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ், வட்டாரத் தலைவா்கள் நாராயணசாமி, ரவிச்சந்திரன், சிறுபான்மை துறை மாநிலத் துணைத் தலைவா் நாகூா் கனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.