பாபநாசம் வட்டம், திருமண்டங்குடியில் 44-ஆவது நாளாக வியாழக்கிழமை கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமண்டங்குடி திருஆரூரான் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததை கண்டித்தும், முதல்வரின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை கொண்டு செல்லும் வகையிலும் நவம்பா் 30-ஆம் தேதி முதல் கரும்பு விவசாயிகள் ஆலை முன் தொடா் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
44-ஆவது நாளான வியாழக்கிழமை ஆலை நிா்வாகமும், அரசும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் மௌனம் காப்பதை வெளிப்படுத்தும் வகையில், ஆலை முன் கரும்பு விவசாயிகள் அமைதியாக அமா்ந்து 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோரிக்கை நிறைவேறாவிடில், பொங்கல் பண்டிகை நாளிலும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனா்.