தியாகிகளின் நினைவு நாள் அனுசரிப்பு

தஞ்சாவூரில் ஞானசேகரன், அஞ்சான், நாகூரான் ஆகிய தியாகிகளின் 41-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
தியாகிகளின் நினைவு நாள் அனுசரிப்பு

தஞ்சாவூரில் ஞானசேகரன், அஞ்சான், நாகூரான் ஆகிய தியாகிகளின் 41-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 1982 ஆம் ஆண்டில் ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதில், 1982, ஜனவரி 19 ஆம் தேதி காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மன்னாா்குடி ஞானசேகரன், மயிலாடுதுறை அஞ்சான், நாகூரான் ஆகியோா் கொல்லப்பட்டனா்.

இத்தியாகிகளின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகே ஏஐடியுசி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு வங்கி ஊழியா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் க. அன்பழகன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, பொருளாளா் தி. கோவிந்தராஜன், துணைச் செயலா் துரை. மதிவாணன், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலா் ஐ.எம். பாதுஷா, கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்கப் பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com